1.பதிசேவை புரிபாவை விதிசேத மண்டாது
மதிசூடு மாதேவன் கதிசேருங் காமாட்சி
2.காமாட்சி பெயர்சொல்லி நாமாட்சி நாம்பெறுவோ
மேமாற்ற நமக்கில்லை சீமாட்டி சிரிப்புளதே
3.உளமெங்கு மூற்றெடுக்கும் வளமான சொற்களினால்
விலையுயர்ந்த மாலையது பலகாலம் புனைவோமே
4.புனைவேடம் பலவுடையா ணினைவெல்லா நகைத்திடுவா
டனைவேண்ட வருடந்தாண் முனைவேது மில்லாமல்
5.இல்லாத நிலையென்று மில்லாம லாக்கிடுவாள்
கல்லாலி னிழலமரு மில்லாளின் கருணையிது
6.இதுகாறுங் காணாத மதிஞான மளித்திடுவாள்
கதிசேரக் காமாட்சி துதிபாட விழைவோமே
7.விழைவேது வேண்டிலமே விழைவாக நீவருவாய்
மழைவேண்டி மரங்ளலெல்லா மழைவேதுந் தருவதில்லை
8.தில்லைக்கு மேலான வெல்லையிருங் காமாட்சி
வில்லேந்தும் புருவத்தாள் புல்லாக்குஞ் செப்புமதோ
9.அதோமுகக் கருணைத்தே இதோவென வீன்றிவளாம்
சதாசிவ நாயகனுஞ் சதாவிவள் சேவையிலே
10.சேவையிலே கரைகண்டு தேவையெல்லா மிவளாக்கி
யாவியிவட் கர்ப்பணிக்க மேவிடுவோங் கச்சிபதி