குழலூது காதலன் தோள்சாய்ந்து கொண்டு
விழைவேது மின்றி மிளிர்வாட் குழலா
தொடுங்குலகு மொப்போ வுரை
குழலூது காதலன் தோள்சாய்ந்து கொண்டு
விழைவேது மின்றி மிளிர்வாட் குழலா
தொடுங்குலகு மொப்போ வுரை
மங்கைக் கிடந்தந்து மானைக் கரங்கொண்டு
கங்கைக் களித்த கதியதனா - லங்கை
யரிக்கொப்பான் கார்மிடற் றான்
இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்
கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற்
காதல் கடவுளுக் கொப்பு
உரலோ டொடுங்க வுடன்படுவான் குன்றை
விரலோ டெடுத்த விறலான் - கருவங்
கடந்தன் பளிப்பவர் கட்கு
வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி
முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி
னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த்
தந்த வயில்வேற் சரவணன் றாளே சரணெமக்கே
அகத்தடை வின்ப மருளினா னீச
னிகத்தடைந் தெட்டி நிறைவைப்- பகர்க்கரிய
பாதைப் பரத்தடையப் பின்பு
இருளகற்று ஞானத் திளங்கதிரா கேட்ட
பொருளளிக்குந் தீராப் புகழ்மரமா நீங்கா
தருள்சுரக்கும் வற்றா வமுதே - மருளாளு
மாந்தரக வாழ்வோ மறைப்பு
நாத்தழும் பேற நவில்வே னுனநாமஞ்
சேர்த்தாள் சிறியனையுஞ் சீர்பாதங் - கார்த்திகைக்
கன்னிவளர் கந்தா கனிந்து
பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி
னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா
யான்றுரைத்தா ளாண்டா ளெமை
பால வடிவினன் பாங்க ளிளமகன்
கோல மயிலினன் கூர்வேலன் மூலன்
முருகன்சொன் மூவா மறை
இன்றுனதாள் போற்றி யியற்றமிழா லேத்தற்குச்
சென்றபிறப் பாற்றிய சீரென்னே செவ்வேளே
கொன்றையணி கூத்தற்கு மாசானே நன்றிசொல
நாடவறா தாசை யளி
விழிமறைக்குங் கைகள் விழைவொடுக்க லாமோ
வழைவனுப்புங் காந்த ளிதழ்கரக்க லாமோ
மழைகொடுக்கும் வானத்தை வேண்டாச் செழிவடக்குஞ்
செம்புலந் தேரினுமுண் டோ
கடலாழஞ் சென்று கடலாடைக் கன்னிக்
கிடரேது மின்றி யெயிற்றா லெடுத்து
விடலாமோ வென்முன் விழிக ணடமாடி
நாணுவதே காத னயம்
தாய்தந்த வேல்வாங்கித் தாரக சூரணிக்கு
மாய்தந்த வள்ளி மணாளன் முகமாறின்
சேய்தந்த செந்தமிழைச் சீர்பயில வாய்தந்த
வாழ்வின்கண் வாரா தயர்வு
மாளாது மாதவன் மாதர்க்குத் தீமைசெயுங்
கேளாது கேசவன் கேளிர்க்குக் கேடழிக்கு
மூளாத மெய்வினையு மூழ்கவே - யாளா
யவற்கடிமை செய்த லணி
ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற்
பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த
மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும்
வானோர்க்கும் வாழ்வளித்த கோ
மூன்றுதமிழ் வித்தகன் மூப்பறியா வேலவனெஞ்
ஞான்றுமுறை நாயக னுள்ள நயந்தருள
யான்றமிழா லேத்துவது மென்று
காலற்குங் காலனே மாலே மணிவண்ணா
வேலுருவாய்க் கந்தனிற்க மெய்வடிவாய்ச் சேவனிற்குங்
கோலமயி றண்ணளியாய்க் கோளறுக்கும் வாழியறத்வெற்றிசேர் வேலும் விளையா டணிமயிலுங்
கொற்றக் கொடியாய குக்குடமுஞ் சிந்தைசெய
நற்றுணையா நாத னருள்
காலனைச் சாடுநற் காலனைச் சித்தமா
மூலனை யாட்கொண்ட மூலனைச் - சூலைதீர்
சூலனைச் சொல்வதன்றோ சொல்
பாலனாய் நின்ற பராசத்தி மைந்தனே
யாலவா யண்ணற்கு மாசானாம் - வேலனாய்
ஞாலமீ டேவர்க்கு நல்கு
கற்பனைக் கெட்டாக் கருவுரு கந்தன்றன் பொற்பதம் பற்றப் புனைகவிதை யாறனைய வற்பற்குந் தோன்று மகத்து
இணக்கமென் றென்று மியல்பினை விட்டுத்
தணிக்கவே சற்றும் பணியாதே யோம்பு
குணக்கடல் கூறா யகம்
கற்பனைக் கெட்டா கருவுருநீ ஞானத்தா லற்பனுக் கெட்டா தமைகுவையோ- சொற்பமுன்ற னின்னருள் சொட்ட விசைத்தமிழ் ஞானமெலாந் தன்னரு ளாகுந் தகை
எந்தை முருகனை யேற்ற தமிழ்பாடிச்
சிந்தைமகிழ் பூசைசெய்து சேர்வனே யூமையற்குஞ்
செந்தமிழ்ச் செப்பீத லான்
மதிவா ணுதலு மலர்விழியுஞ் சற்று
முதிரா குழலு மொளிரெயிறுங் கொவ்வை
யிதழு யிளமுலையுங் காணா ரிழந்தார்
மதிமருட்டு மிம்மா மயக்கு
மதிசூடு மாதவனின் மாண்புணர்ந்து செய்ய
துதிசூடு சொன்மாலை சாற்ற - விதிசூழும்
பாழ்வாழ்வின் பற்றகலு மிந்நாளி லுண்முகத்து
வாழ்வாய வீழு மயக்கு
காலாற் புவிவா னளந்தான் கதிதரு
மாலா லுயர்வார் மதிபெற்ற- நாலாகாலனைக் காலா லுதைத்தான் கதிதருநாள்
காலையு மாலையு நள்ளிரவுங் கண்விழித்
தாலவா யண்ணலி னந்தமிலாக் கீர்த்தியைச்
சாலவே யெண்ண றலை
வில்லொன்று கொண்டான் வியனுலகின் மாந்தனாய்ச்
சொல்லொன்று கொண்டான் றுயரழிக்குந் தூயவளை
யில்லென்று கொண்டா னிலக்கடையு மம்பிளையா
கொல்லாமற் கொல்லுமிக் கண்
மன்றாடி மைந்தனை மாமயில் வாகனனைக்
குன்றாடு கொற்றனைக் கோட்டுருவு வேலனைச்
சென்றோடிச் சேவித்துஞ் சிந்தித்து முய்வனோ
வென்றாடி வெள்ளாமுன் யான்
வினைப்பயன் மாற்ற விழைவெனக் கில்லை
நினைத்ததி யாவு நிறைவேற வேண்டா
வுனைப்பய னென்றே யுணர்ச்சியை வெல்ல
முனைப்பினை யாண்முரு கா
அணிதிக ழாழியு மார்ப்பரி சங்கும்
பணிதுயின் மேனியும் பற்பமலர்க் கண்ணு
மணிதிகழ் மார்பின் மலர்மகளுந் தூய
குணந்திகழ் கோவின் குறி
நிறைமதி நாண நிறந்திகழ் சோலை
நறைமலர் நாண நடையார் - மறைமுனி
யூர்தி யனநாண வோதத் துதித்தாஅண்
மார்திகழ வாஞ்சைமிகு மாற்கு
மதிபணி மின்ன மலர்நதி மின்ன
விதிதலை யோடுவிரன் மின்ன - கதிதரு
காசி கனலொடு மின்ன விரந்தனன
ம்
மாசை யகற்ற விறை
அடிபணியு மன்பர்க்குன் னன்பே யருளா
யடிபணியா வம்பர்க்கோ வஃதே - கடிவதுபோற்ஓயா துனைநாளு முள்ளத்தி லுள்ளிநிற்கக்
காயாத காட்டங் கடிதேகுஞ் - சேயனாஞ்
செவ்வாயின் செவ்வேளைச் செவ்வேளைச் செப்பற்கே
யிவ்வாழ்வை யீந்தா யிசைந்து
வஞ்சிக்கண் வைத்தமனம் வேறேது நாடாது
துஞ்சிக்கண் சாய்ந்தாலுந் தூங்காது - நஞ்சீதா
நல்லமுதா நாடவறா வாடவரை யாட்கொளுதே
வெல்லமிது வேம்பைக் குழைத்து
விதிவிலக் கிட்டவன் வீற்றிரு குன்றிற்
பதிவிளக் கிட்டவன் பாங்கை - மதிநிறுத்தி
வண்ணத் தமிழ்புனைந்த வாக்கிற் கொருகவியை
யெண்ணத் தமிழ்புலர்ந்த தே
பகலவ னாக்கம் பழுதிலி பார்வை
புகலவ னாக்கம் புரைதீ - ரிகலவன்
வீழ விராமனு மேத்தவமர் வென்றியருள்
வீழ விராமனு மாசு
ஞாலத் தொருபொருளை ஞானத் தடைமுடிவைச்
சீலத் தமிழ்பாடு செந்நாவாற் -காலத்மண்ணாளு மன்னற் கடிபணித னன்முறையோ
பண்ணாளும் பைந்தமிழ ரேற்பாரோ - பெண்ணாளும்
பாகத்தான் பைந்நாகத் தாழ்சடையான் றாளொன்றே
தாகத்தார் சாற்றும் பணிவு
சீரலைவாய் காத்த சிவசுதன்வேல் பேரலைவாய்
பீடழியாக் காப்பாங் கடைக்கு
உயிர்வலி நீக்கி யுளமகிழ் நாட்டுந்
துயரறக் காக்குஞ் சுடரா - முயர்வாம்கடலோரக் காற்றிற் கசிந்துவரு நீரா
யுடலுள்ளஞ் சிந்தை யுனதாய் - மடலேறப்பழத்தின் பொருட்டுப் பழனி யமர்ந்த பரம்பொருளைக்
கிழத்தி னுருவிற் கெழீஇய நட்பின் கரம்பிடித்தநடைப்பயண மேற்கொள்ள நல்லபயன் கிட்டு மிடைக்கொழுப்பு நீங்கு மிதமா - யடைப்பின்றிச் செங்குருதி யோடு மிதயஞ் சிறந்தியங்கு மங்கா தொளிரு மதி